The winning entry has been announced in this pair.There were 9 entries submitted in this pair during the submission phase, 3 of which were selected by peers to advance to the finals round. The winning entry was determined based on finals round voting by peers.Competition in this pair is now closed. |
லா டொமேடினா கொண்டாட்டத்தின் துரதிர்ஷ்டமான முதல் தக்காளியை யார் எறிந்தது? உண்மையைலேயே இதை யாருமே அறிந்திருக்க மாட்டர். இது பிரெஞ்சு எதிர்ப்பு புரட்சியாகவோ அல்லது ஒரு கொண்டாட்டமாகவோ இருந்திருக்கலாம். இதனைப் பற்றிய ஒரு பிரபலமான கருத்து என்னவென்றால், 1945ல் நடந்த லாஸ் ஜைஜான்டிஸ் (ஒரு மாபெரும் காகிதக்கூழ் பொம்மைகளின் அணிவகுப்பு)திருவிழாவின்போது, மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக உள்ளூர்வாசிகள் ஒரு அமளியில் ஈடுபட முடிவு செய்தனர். அப்போது அருகில் இருந்த காய்கறி வண்டியிலிருந்து பழுத்த தக்காளிகளை எடுத்து வீசி எறிய ஆரம்பித்தனர். இது ஒரு பெரும் அமளியில் முடியும் வரை அப்பாவி பார்வையாளர்கள் இதனை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருந்தனர். அமளியைத் தூண்டியவர்கள் தக்காளி வியாபாரிகளுக்கான பணத்தை செலுத்த வெண்டும், ஆனாலும் இதனால் இந்த தக்காளிச் சண்டை தொடர்ந்து ஏற்படுவதை தடுக்க முடியவில்லை - இதுவே ஒரு புதிய பாரம்பரியம் பிறக்க காரணமாக அமைந்தது. 1950களில் கட்டுக்கடங்காத மோதல் உருவாகலாம் என்ற அச்சத்தில், தொடர்ந்த தடைகளை சட்டமுறைப்படுத்தினர். 1951 ஆம் ஆண்டில், சட்டத்தை மீறும் உள்ளூர்வாசிகளை விடுதலை செய்யுமாறு பொது மக்கள் கண்டனம் தெரிவிக்கும் வரை அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 1957ல் தக்காளித் திருவிழா தடைக்கு ஒரு மிகப் பிரபலமான எதிர்ப்பு ஏற்பட்டது. அதில் தக்காளித் திருவிழா ஆதரவாளர்கள் ஒரு சவப்பெட்டியில் தக்காளியை வைத்து ஊர்வலமாகச் சென்றனர். 1957 பிறகு, உள்ளூர் அரசு, நிலைமையை சமாளிக்க, சில நிபந்தனைகளுடன் இந்த வேடிக்கையான பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தது. இதில் தக்காளியே பிரதானமாக இருப்பினும், முடிவில் இறுதிநாள் கொண்டாட்டத்துடன் ஒரு வாரத்திற்கு இந்த திருவிழா நடைபெறும். இது பூன்யோல் புனிதத் துறவிகள், கன்னி மேரி மற்றும் புனித லூயிஸ் பெர்ட்ராண்ட் ஆகியோருக்கான திருவிழா. இதில் ஸ்பேனிஷ் பாணியில் வீதி ஊர்வலங்கள், இசை, மற்றும் வானவேடிக்கை ஆகியவை நிகழ்த்தப்படும். எதிர்வரும் அமளியைச் சமாளிக்க உங்களை வலுப்படுத்தும் விதமாக, கொண்டாட்டத்தின் முந்தைய நாள், வியத்தகு பியல்லா என்ற உணவு வழங்கப்படும்.இதைத் தவிர போற்றுதலுக்குரிய வாலன்சிய அரிசி உணவு, கடல் உணவு, குங்குமப்பூ மற்றும் ஆலிவ் எண்ணெயும் வைக்கப்படும். இன்று, இந்த கட்டுப்பாடற்ற திருவிழாவிற்கு சில நிபந்தனைகள் உள்ளது. ஒருங்கிணைப்பாளர்கள் இந்த திருவிழாவுக்கென பிரத்யேகமான விரும்பத்தகாத வகையிலான தக்காளிகளை பயிரிடும் அளவிற்கு சென்றுள்ளனர்.திருவிழா காலை 10 மணிக்குத் துவங்கும். பங்கேற்பாளர்கள் வழுவழுப்பான கம்பத்தின் உச்சியில் இருக்கும் பன்றியிறைச்சியை கவர விரைந்து மேலேற, அதே சமயம் பார்வையாளர்கள் தெருக்களில் பாட்டுபாடி நடனமாடிக் கொண்டே மேலே ஏறுபவர்களின் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பர். தேவாலயத்தின் நண்பகல் மணி அடிக்கும்போது, தக்காளி நிரம்பிய லாரிகள் வீதிகளில் திறந்து விடப்படும், அதே நேரம் 'டொ-மே-டே, டொ-மே-டே" என்ற கோஷம் உச்சத்தை எட்டும். பின்னர், ஒரு தண்ணீர் பீரங்கித் தாக்குதலிலிருந்து முக்கிய நிகழ்வு துவங்குகிறது. அதுவே சக போட்டியாளர்களுக்கு எதிராக நாலாப்புறங்களிலும் தக்காளிகளை நசுக்கி வீசி எறிவதற்கான பச்சைக்கொடி. நீண்ட தூரம் தக்காளி எறிதல்,பட்டவர்தனமாக எறிதல், மற்றும் நடுத்தர அளவில் குறிபார்த்து எறிதல், இதில் எந்த நுட்பத்தை நீங்கள் கையாண்டாலும், அதன் முடிவில்,நீங்கள் வித்தியாசமாக காட்சி அளிப்பீர்கள் (மற்றும் உணர்வீர்கள்). கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து, தக்காளியில் நனைந்த போட்டியாளர்கள் தெருவில் இருக்குல் சல்ஸா சகதியில் விளையாடுவர். இரண்டாவது பீரங்கிச் சூடு, போட்டி முடிவு அறிவிப்பிற்கான சமிக்ஞை ஆகும். | Entry #20456 — Discuss 0 — Variant: Not specified Winner
|
“லா டொமடினா” தக்காளி புரட்சி தொடங்க காரணமான வினை சூழ்ந்த, அந்த முதல் பழத்தை எறிந்தது யார்? இது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை . ஒருவேளை பிரான்கோவுக்கு எதிரான புரட்சியாகவோ அல்லது அத்துமீறிய கேளிக்கை களியாட்டமாகவோ இருந்திருக்கக்கூடும். மிகவும் பிரபலமான கூற்று படி 1945 இல் நடந்த லாஸ் கிகன்ட்ஸ் திருவிழாவின் (இராட்சத காதிக பொம்மை அணிவகுப்பு ) பொழுது உள்ளூர்காரர்கள் மற்றவர்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்கும்பொருட்டு அமளியில் ஈடுபட சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தனர். அருகில் இருந்த காய்கறி வண்டியிலிருந்த பழுத்த தக்காளி பழங்களை எடுத்து வீசி ஏறிய ஆரம்பித்தார்கள். அப்பாவி பார்வையாளர்களும் இதில் கலந்துகொள்ள தக்காளிகள் பறக்கும் ஒரு பிரமாண்டமான அமளி துமளி காட்சியாக உருவெடுத்தது. இதை முன்னெடுத்தவர்கள் தக்காளி பழ வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டியிருந்தபோதும் மீண்டும் ,மீண்டும் தக்காளி சண்டைகள் அரங்கேறுவதை தடுக்க முடியவில்லை –ஒரு புதிய பாரம்பரியம் பிறந்தது. இது கட்டுக்கடங்காமல் பெருகும் என்று பயந்த அதிகாரிகள், சட்டம் இயற்றினார்கள் ,தளர்த்தினார்கள், தொடர்ச்சியாக பல தடை உத்தரவுகளை 1950 இல் அமல்படுத்தினார்கள். இந்த சட்டத்தை மீறிய உள்ளூர்க்காரர்கள் 1951 இல் சிறையில் அடைக்கப்படும் நிகழ்வுகள்,இவர்களின் விடுதலைக்காக மக்கள் குரல் எழுப்பும்வரை தொடர்ந்தது. இத்தடைகளுக்கு எதிரான அவமதிப்பு நடவடிக்கைகளில் மிகவும் பிரபலமானது, 1957 ஆம் ஆண்டு அதன் ஆதரவாளர்கள், தக்காளியை சவப்பெட்டியில் எடுத்து சென்ற நையாண்டி சவஊர்வலமும் ,நடத்திய ,ஈமக்கிரியையும் தான். 1957 க்கு பிறகு உள்ளூர் அரசாங்கம் ஊரோடு ஒத்து போக முடிவு செய்து ,சில விதிமுறைகளை வகுத்து ,இந்த வினோதமான பாரம்பரியத்திற்கு இணக்கமானார்கள் தக்காளி நடுநாயகமாக இருந்தாலும் ஒரு வார கொண்டாட்டத்திற்கு பிறகே உச்சகட்ட கேளிக்கையாக தக்காளி எறிவது நடைபெறும். அது புநோல் நகரத்தின் புனித காப்பாளர்களின் திருவிழா நாள்,கன்னி மேரி ,புனித லூயிஸ் பெற்றண்ட் முதலியோரின் அணிவகுப்பு ,இசை, வாண வேடிக்கைகள் நிறைந்த மகிழ்சிகரமான ஒரு ஸ்பானிஷ் திருவிழா. இறுதிக்கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக தேவைப்படும் ஊட்டத்தை அளிப்பதற்கு ஸ்பானிஷ் காப்பிய விழுமிய உணவான பெல்லா, முதல் நாள் மாலை பரிமாறப்படுகிறது.இது அரிசி,கடல் உணவு,குங்குமபூ,இடலை எண்ணை கலந்த ஒரு மரபு சார்ந்த ஸ்பெயின் நாட்டு உணவு. இன்று இந்த கட்டுப்பாடற்ற திருவிழா சில வரைமுறைக்கு ஆட்படவைக்கப்பட்டுள்ளது. இந்த விழா அமைப்பாளர்கள், ஆண்டு தோறும் நடக்கும் இந்த நிகழ்வுக்காக ஒரு விதமான சுவையற்ற தக்காளியை பயிரிடும் அளவுக்கு கூட சென்றார்கள் . களியாட்ட கொண்டாட்டங்கள் காலை 10 மணியளவில் தொடங்குகிறது.அப்பொழுது பங்கேற்பவர்கள் ஒரு சறுக்கு மரத்தின் உச்சியில் கட்டப்பட்டுள்ள பன்றி தொடை இறைச்சியை கைப்பற்றும் நோக்கத்துடன் வேகமாக முன்னேறுவார்கள் . பார்வையாளர்கள் சறுக்கு மரத்தை தொற்றி ஏறுபவர்கள் மீது நீளமான நீர் குழாய்கள் மூலம் தண்ணீரை தெளித்து தெருக்களில் ஆடி பாடி மகிழ்வார்கள் . மதிய நேரத்தை குறிக்க தேவாலய மணி ஒலிக்கும் நேரத்தில் சுமையூந்துகள் தக்காளி பழங்களுடன் நகரத்திற்குள் நுழையும் . அப்பொழுது " தக்காளி ,தக்காளி " என்ற முழக்கங்கள் உச்சகட்டத்தை அடைகிறது . அப்பொழுது ஒரு தண்ணீர் பீரங்கியை வெடிக்க செய்து விழா துடங்கி விட்டதை அறிவிப்பார்கள் . அது தான் தக்காளி பழங்களை நசுக்கி உடன் பங்கேற்பவர்கள் மீது வீசி எறிவதற்கான சமிக்கை . தொலை தூர தக்காளி செலுத்துபவரோ , அருகில் இருக்கும் இலக்கை தாக்குபவரோ அல்லது நடுத்தர தூரத்தில் இருப்பவரை பார்த்து சுழற்றி அடிப்பவரோ எது உங்கள் உத்தியாக இருந்தாலும் ,விழா முடியும் பொழுது உங்களது தோற்றமும் ( உணர்வும் ) மாறுபட்டதாக இருக்கும் . ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கு பின்பு தக்காளி சாறில் தோய்ந்த வீச்சு வீரர்கள் எல்லோரும் தக்காளி கூழால் கடல் போல காட்சி அளிக்கும் சாலைகளில் சல்சா நடனம் ஆடுவார்கள் .அங்கு பெயருக்கு கூட தக்காளி போல காட்சி அளிக்கும் ஒரு பொருளை கூட பார்க்க முடியாது . இரண்டாவது முறை ஒலிக்கும் தண்ணீர் பீரங்கி ஒலி தக்காளி சண்டை முடிவுக்கு வந்ததை குறிக்கும். | Entry #15539 — Discuss 0 — Variant: Not specified Finalist
|
லா டொமாட்டினா! இந்தப் புரட்சி தோன்றுவதற்குக் காரணமான அந்த பரிதாபத்திற்குரிய முதல் தக்காளியை எறிந்தவர் யார்? இந்த உண்மை யாருக்குமே தெரியாது என்பதுதான் நிதர்சனம். ஒரு வேளை, இது ஃபிரான்ஸ் நாட்டுக்கு எதிரான புரட்சியாக இருக்கலாம், அல்லது கைமீறிப் போன ஒரு திருவிழாவாக இருக்கலாம். இதன் பின்னணி குறித்த பல்வேறு கதைகளில், 1945ல் நடைபெற்ற லாஸ் கிகான்டஸ் (காகிதத்தால் தயாரிக்கப்பட்ட ஓர் அசுர பொம்மை ஊர்வலம்) திருவிழாவின் போது, உள்ளூர் மக்கள், ஒரு சச்சரவினை ஏற்படுத்தி அதன் மூலம் ஏனையோரின் கவனத்தினை தங்கள் மீது ஈர்க்க முற்பட்டதே மிகப் பிரபலமாக அறியப்படுகிறது. ஒரு காய்கறி வண்டியின் அருகில் இருந்த இவர்கள், பழுத்தத் தக்காளிகளை வீசியெறியத் தொடங்கினார்கள். அங்குக் குழுமியிருந்த அப்பாவி பார்வையாளர்களும் இதில் கலந்துகொள்ள, இந்த சம்பவம், தக்காளிப்பழங்களை சகட்டுமேனிக்கு வீசியெறியும் மாபெரும் கைக்கலப்பாக உருவெடுத்தது. கலவரக்காரர்கள், தக்காளி வணிகர்களுக்கு, அவற்றிற்கான விலையைக் கொடுக்க நேர்ந்தது. இருந்தபோதிலும், இதனால், தக்காளி எறியும் சண்டைகள் தொடந்து அதிகரிப்பதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவோ, இதன் தொடர்ச்சியாக ஒரு புதிய கலாச்சார உதயமாவதை தடுக்கவோ முடியவில்லை. 1950களில் அதிகாரிகள், நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடக்கூடாது என்ற அச்சத்தில், பல்வேறு தடைகளை ஏற்படுத்தி, பிறகு அவற்றைத் தளர்த்தி, மீண்டும் தொடர்ச்சியான தடைகளை அமல்படுத்தினர். 1951களில், இந்த சட்டத்தை மீறிய உள்ளூர் மக்கள் கைது செய்யப்பட்டு, பின்னர், இந்த நடவடிக்கைக்கு எதிரான பொதுமக்களின் கண்டன ஆர்ப்பாட்டங்கள் காரணமாக விடுவிக்கப்பட்டனர். 1957ல் தக்காளித் திருவிழாவிற்கு விதிக்கப்பட்ட தடையை கடுமையாக அவமதிக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள், தக்காளியை சவப்பெட்டியில் வைத்து ஊர்வலம் வந்து ஒரு போலியான இறுதிச்சடங்கினை நிகழ்த்தினர். 1957க்குப் பிறகு, இந்த அவமதிப்புகளை சமாளிக்கத் தீர்மானித்த உள்ளூர் அரசு, இந்த ஆர்வக்கோளாறுடைய கலாச்சாரத்தினை ஒரு சில புதிய சட்டங்களுக்கு உட்படுத்தி ஏற்றுக்கொண்டனர். ஒரு வாரம் நடைபெறும் இந்த திருவிழாவில் தக்காளிகளே முக்கிய அம்சமாக இருந்தபோதிலும், படிப்படியாக திருவிழா நிகழ்ச்சிகள் உச்சக்கட்டத்தினை அடைகின்றன இது ப்யூனோல் நகரத்துப் புனிதர்கள், கன்னி மேரி மற்றும் தூய லூயிஸ் பெர்ட்ராண்டு ஆகியோரை சிறப்பிக்கும் கொண்டாட்டம் ஆகும். மகிழ்ச்சி பொங்கும் இந்த ஸ்பெயின் பாணி ஊர்வலக் கொண்டாட்டங்களில் இசை மற்றும் வாண வேடிக்கைகள் காண்பவரைக் கிறங்கடிக்கும். இந்த சச்சரவிற்கு ஆயத்தமாக உங்கள் உடல் வலிமையை அதிகரித்துக்கொள்ள, சச்சரவு தின இரவில் வாலன்சியா நகரின் சிறப்புத்தன்மை வாய்ந்த சாதம், கடல் உணவு, குங்குமப்பூ மற்றும் ஆலிவ் எண்ணெயால் தயாரிக்கப்பட்ட உணவான பாரம்பரிய பயல்யா பரிமாறப்படும். தற்போது, இந்த தடைகளற்ற திருவிழா சில ஒழுங்குமுறைகளைக் கொண்டிருக்கிறது. ஆண்டுத் திருவிழாவிற்கு என்றே பிரத்யேகமாக, உண்ணத் தகுதியற்ற சிறப்பு வகை தக்காளிகளைப் பயிரிடுமளவிற்கு திருவிழா அமைப்பாளர்கள் மெனக்கெடுகின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த விழா நிகழ்ச்சிகளில் பன்றித் தொடை இறைச்சி உச்சியில் தொங்கவிடப்பட்ட ஒரு வழுக்கு மரத்தினைக் கைப்பற்ற பங்கேற்பாளர்கள் ஓட்டமெடுப்பார்கள். பார்வையாளர்களோ ஆடல் பாடலுடன் வளைக்குழாய்கள் மூலம் பங்கேற்பாளர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து, நிலைக்குலையச் செய்வார்கள். மதிய நேரத்தினைத் தொடர்ந்து தேவாலய மணி ஒலித்ததும், டன் கணக்கில் தக்காளி ஏற்றிய லாரிகள், நகருக்குள் நுழையும்போது, ”டொமேடே, டொமேடே” என்று படிப்படியாக முழக்கங்கள் குரலெழும்பி விண்ணைமுட்டும். பிறகு, தண்ணீர் பீரங்கி இயக்கத்துடன் முக்கிய நிகழ்ச்சி துவங்குகின்றது. தக்காளியை நசுக்கி சகப் பங்கேற்பாளர்கள் மீது கண்மூடித்தனமாக வீசி, தாக்குதல்களைத் தொடங்குவதற்கான பச்சை விளக்கு இதுவாகும். தொலைதூர தக்காளி வீசும் கருவிகள், நேருக்கு நேராக சுடும் ஆயுதங்கள் மற்றும் மத்திய தூர ஹுக் ஷாட்கள் என தாக்குதல் உத்தி எந்த வகையானாலும், அது முடிவடைந்த பிறகு, நீங்கள் முற்றிலும் வித்தியாசமாக காணப்படுவீர்கள்; மற்றும் உணரப்படுவீர்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, தக்காளிக் குழைவில் தோய்ந்த பங்கேற்பாளர்கள், தக்காளிக் குழைவு வெள்ளமாய்த் தேங்கியிருக்கும் தெருக்களில் சால்ஸா நடனமாடத் தொடங்குவார்கள். அங்கு தக்காளியை நினைவுபடுத்தாத மக்களை அரிதாகவே காண முடியும். இரண்டாவது பீரங்கி முழக்கத்துடன் இந்த விளையாட்டு நிறைவடைகின்றது. | Entry #16622 — Discuss 0 — Variant: Not specified Finalist
|
La Tomatina புரட்சியை தொடங்கிய முதல் துரதிர்ஷ்டமான தக்காளியை வீசியெறிந்தது யார்? உண்மையில் இது யாருக்குமே தெரியாது. ஒருவேளை அது ஒரு பிராங்கோவை எதிர்க்கும் கிளர்ச்சி, அல்லது கைமீறி சென்றுவிட்ட திருவிழாவாக இருக்கலாம். கதையின் மிகவும் பிரபலமான பதிப்புபடி, 1945-இல் நடந்த Los Gigantes (ஒரு மாபெரும் காகித mâché கைப்பாவை அணிவகுப்பு) திருவிழாவின் போது, கவனத்தை பெறுவதற்காக உள்ளூர் மக்கள் அமளியை தொடங்க வழி தேடினர். அருகில் உள்ள ஒரு காய்கறி வண்டியை பார்த்த அவர்கள், அதிலிருந்து பழுத்த தக்காளியை வீச தொடங்கினர். அப்பாவி பார்வையாளர்களும் இதில் ஈடுபட்டதால், இந்த காட்சி பழம் பறக்கும் ஒரு மாபெரும் கைகலப்பாக மாறியது. தூண்டிவிட்டவர்கள், தக்காளி விற்பனையாளர்களுக்கு பணம் தரவேண்டியிருந்தது, ஆனாலும் இதனால் மேலும் அதிகமான தக்காளி சண்டைகளை நிறுத்த முடியவில்லை—மற்றும் ஒரு புதிய மரபு பிறந்தது. நிலைமை அத்துமீறி போய்விடும் என்ற அச்சத்தில், 1950-இல் அதிகாரிகள் சட்டமியற்றி, அதை தளர்த்தி மற்றும் மீண்டும் தடைகளின் ஒரு தொடரையே அமல்படுத்தினார்கள். 1951-ஆம் ஆண்டில், இந்த சட்டத்தை மீறியவர்கள், உள்ளூர் மக்கள் கண்டனம் செய்து அவர்களது விடுதலைக்காக குரலெழுப்பும் வரை, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த தக்காளி சண்டையின் தடையை அவமதிப்பதற்காகவே ஒரு மிக பிரபலமான போராட்டம் 1957-இல் நடந்தது, இதில் தக்காளி சண்டையின் ஆதரவாளர்கள் தக்காளிக்காக ஒரு போலியான சவப்பெட்டியை வைத்து ஒரு இறுதி ஊர்வலத்தையே நடத்தினர். 1957-ற்கு பிறகு, உள்ளூர் அரசு சட்டபூர்வமான சக்தியை பயன்படுத்த முடிவுசெய்து, ஒரு சில விதிகளை சரியான இடத்தில் வலியுறுத்தி, இந்த பைத்தியக்காரத்தனமான மரபை ஏற்றுக்கொண்டனர். தக்காளிகளை வீசிஎறிதல் மையமான நிகழ்ச்சியாக அமைந்தாலும், விழா ஒரு வாரம் நடந்த பிறகே, அந்த இறுதி காட்சிக்கு வழிவகுக்கிறது. இதில் Buñol-ஐ ஆதரிக்கும் ஞானிகளின் விழா, கன்னி மேரி மற்றும் செயின்ட் லூயிஸ் பெர்ட்ரண்ட் விழா, தெருவில் அணிவகுப்பு, இசை, மற்றும் சந்தோஷமான ஸ்பானிஷ் வகை வானவேடிக்கை கொண்டாட்டம் நடைபெறுகிறது., வரவிருக்கும் சண்டையில் உங்கள் வலிமையை உயர்த்த, அரிசி, கடல்உணவு, குங்குமப்பூ, மற்றும் ஆலிவ் எண்ணெய் மூலம் உருவான வலென்சிய உணவுவகை ஒரு காவிய paella பண்டமாக போர் தினத்தன்று பரிமாறப்படுகிறது. இன்று, இந்த தடையில்லா திருவிழாவில் சில ஒழுங்குமுறைகள் உள்ளன. இந்த ஆண்டு நிகழ்வுக்காகவே சுவையில்லாத ஒரு சிறப்பு வகை தக்காளியை அமைப்பாளர்கள் பயிரிட தொடங்கியுள்ளார்கள். 10 மணிக்கு கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும், முதலில் பங்கேற்பாளர்கள் பசை தடவப்பட்ட கம்பின் மேலேயுள்ள பன்றியின் இறைச்சியை எடுக்க போட்டியிடுவார்கள். தெருவில் பாடிக்கொண்டும், நடனமாடிக்கொண்டும் திரியும் பார்வையாளர்கள், ஊர்ந்து செல்லும் போட்டியாளர்கள் மீது குழாய் மூலம் தண்ணீரால் தாக்குவார்கள். மாதா கோவிலின் நண்பகல் மணி கேட்கும்போது, .தக்காளி நிரம்பிய லாரிகள் நகரத்தில் நுழையும், அதே நேரத்தில் "To-ma-te, to-ma-te!" அதாவது டொமேடோ-, டொமேடோ என்றிசைக்கும் ஓதல்கள் உச்சத்தை எட்டும். பிறகு, தண்ணீர் பீரங்கியை சுடும் சத்தம் மூலம், முக்கிய நிகழ்வு தொடங்குகிறது. தக்காளிகளை நசுக்கி மற்றும் தாக்குதலை சக பங்கேற்பாளர்களுக்கு எதிராக முழுமூச்சுடன் தொடங்குவதற்கான பச்சை விளக்காக இந்த ஒலி இருக்கிறது. நீங்கள் நீண்ட தூரத்திலிருந்து தக்காளியை வீசியெறிபவர்களோ, சரியாக-குறிவைத்து அடிப்பவர்களோ மற்றும் நடுத்தர வேகமுள்ள வீரர்களோ, உங்கள் நுட்பம் எப்படியிருந்தாலும், இது முடியும் நேரத்தில், நீங்கள் மிகவும் வித்தியாசமாக தெரிவீர்கள் (மற்றும் உணர்வீர்கள்). கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து, தக்காளி குண்டு வீசிய வீரர்கள் தெருவில், கிட்டத்தட்ட தக்காளியின் அறிகுறியே தெரியாத ஒரு ஈரமான கடலில் சல்சா நடனம் ஆடுவார்கள். இரண்டாவது முறை பீரங்கியை சுடும் சத்தம் போர் முடிவை அறிவிக்கிறது. | Entry #19102 — Discuss 0 — Variant: Not specified
|
‘லா டொமாட்டினா புரட்சி’ உருவாக காரணமாக இருந்த முதல் தக்காளியை எறிந்தது யார்? உண்மை என்னவென்று யாரும் அறிய மாட்டார்கள். அது ஃப்ராங்கோவிற்கு எதிரான புரட்சியாகவும் இருக்கலாம் அல்லது எல்லை மீறிப் போன ஒரு விழாவாகவும் இருக்கலாம். மிகவும் பிரபலமான ஒரு கருத்துக்கேற்ப 1945-ல் நடந்த ‘லாஸ் ஜிஜான்டே’ திருவிழாவின்போது (காகிதக்கூழால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட பொம்மைகளின் ஊர்வலம்) உள்ளூர்வாசிகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஏதாவது பிரச்னை செய்ய நினைத்தார்கள். அப்பொழுது அந்த வழியாக வந்த காய்கறி வண்டியிலிருந்த பழுத்த தக்காளிகளை வீசி எறிய ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் கூட்டத்தை வேடிக்கை பார்த்தவர்களும் இதில் பங்கு கொள்ள அது ஒரு மாபெரும் தக்காளி வீசும் திருவிழாவாக முடிந்தது. விழா ஏற்பாட்டாளர்கள் அந்த தக்காளிகளுக்கான விலையை கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் இது தக்காளி வீசுவதை கட்டுப்படுத்தவில்லை. மாறாக அதிக தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்டனர் – பின்னர் அதுவே ஒரு பாரம்பரியமாக மாறியது. 1950-ல் இதற்கு தடை விதிக்கப்பட்டு, மீண்டும் தளர்த்தப்பட்டு, மறுபடியும் தடை விதிக்கப்பட்டது. 1951-ல் விதியை மீறியவர்கள் சிறையிலடைக்கப்பட்டு மக்கள் போராட்டம் காரணமாக விடுவிக்கப்பட்டனர். 1957-ல் இந்த தடைக்கு எதிராக மிகவும் பிரபலமான ஒரு நிகழ்வு நடந்தது. தடையை எதிர்த்தவர்கள் ஒரு சவப்பெட்டியில் தக்காளியை நிரப்பி ஒரு தக்காளி இறுதி ஊர்வலம் நடத்தினர்.பின்னர் 1957-ல் உள்ளூர் அரசாங்கம் சில சட்ட திட்டங்களுடன் இந்த வினோத பாரம்பரியத்தை அரவணைத்துக் கொண்டது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக தக்காளி இருந்தாலும், இவ்விழா பல்வேறு இதர கொண்டாட்டங்களுடன் ஒரு வார காலத்திற்கு நடைபெறுகிறது. இவ்விழா ‘ப்யூனால் பேட்ரன் செயின்ட்ஸ், விர்ஜின் மேரி, செயின்ட் லூயிஸ் பெட்ரான்ட் ஆகியோரை கொண்டாடும் விழாவாகும். விழாவில் ஊர்வலங்கள், இசை அணிவகுப்பு, வாண வேடிக்கை முக்கிய அம்சங்களாகும். தக்காளி எறி விழாவில் கலந்து கொள்ள தெம்பு கொடுக்கும் விதமாக, விழாவிற்கு முன் தினம் ‘எபிக் பேயில்லா’ எனப்படும் ஒரு வகை கடல் உணவு பரிமாறப்படுகிறது. இந்த ‘வேலன்சியா’ உணவில் அரிசி சாதம், கடல் உணவு, குங்குமப்பூ மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து செய்யப்படுகிறது. தற்போது இவ்விழா மிகுந்த கற்பனைத் திறனுடனும் கலை நயத்துடனும் கொண்டாடப்படுகிறது. மேலும் இவ்விழா அமைப்பாளர்கள் ஒரு படி மேலே போய், இவ்விழாவிற்கென்றே பிரத்தியேகமாக சாப்பிட முடியாத தக்காளியை விளைவிக்கின்றனர். காலை 10.00 மணிக்கு விழா களை கட்டுகிறது. வழுவழுப்பான ஒரு கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் ஒரு மாமிசத்துண்டை எடுப்பதற்கு போட்டியாளர்கள் முட்டி மோதுகின்றனர். சுற்றி இருப்பவர்கள் அவர்கள் மேல் தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றனர். ஆட்டமும் பாட்டமுமாக விழா தொடங்குகிறது. சரியாக 12.00 மணிக்கு மாதா கோயில் மணி அடிக்கிறது. தக்காளிகளால் நிரப்பப்பட்ட டிரக்குகள் மெல்ல ஊர்ந்து வருகின்றன. அனைவரும் “டோ-மா-டீ”....“டோ-மா-டீ”...என்று உச்சரிக்க ஆரம்பிக்கின்றனர். தண்ணீர் பீரங்கியின் முழக்கத்துடன் விழா ஆரம்பிக்கிறது. இதுவே தக்காளிகளை நசுக்குவதற்கும், மற்றவர் மீது எறிவதற்குமான பச்சை விளக்காகும். தூரத்தில் இருப்பவர்கள், சற்று தூரத்தில் இருந்து வீசுபவர்கள், மிக அருகில் இருந்து தக்காளிகளால் தாக்கிக் கொள்பவர்கள் என்று எல்லா நிலைகளில் இருந்தும் தாக்குதல் தொடர்கிறது. நீங்கள் எந்த பிரிவில் இருந்தாலும் முடிவில் உங்களைப் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பீர்கள் அல்லது உணர்வீர்கள். சுமார் ஒரு மணி நேரம் கழித்து அந்த தெருவே தக்காளி சகதியால் நிறைந்து, அனைவரும் அதில் சால்சா நடனம் புரிந்து கொண்டு ஏதாவது தக்காளி போன்று கிடைக்காதா என்று தேடிக் கொண்டிருப்பர். மற்றுமொரு தண்ணீர் பீரங்கி முழக்கம் விழாவை முடிவுக்கு கொண்டு வரும். | Entry #16789 — Discuss 0 — Variant: Not specified
|
யாரந்த முதல் தக்காளியை வீசி லா டொமாட்டினா எனப்படும் இஸ்பானிய தக்காளித் திருவிழாவை ஆரம்பித்தது? உண்மை என்னவென்றால் யாரது என்பது யாருக்கும் தெரியாது. அது ஃப்ரெஞ்சு எதிர்ப்பாளர்களில் ஒருவனாக இருக்கலாம். அல்லது அது கட்டுப்பாடிழந்து போன ஒரு திருவிழா களியாட்டத்தின் விளைவாகக்கூட இருக்கலாம். ஆனால் பலரும் அறிந்த புகழ்பெற்ற கதை என்னவென்றால், 1945 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட இராட்சதர் ஊர்வலத்தில் (லா ஜெஜாண்டிகா - காகிதக் கூழால் செய்யப்பட்ட இராட்சத பொம்மைகளின் ஊர்வலம்) சில உள்ளூர் இளைஞர்கள், எல்லோர் கவனத்தையும் தம்பக்கம் திருப்ப எதாவது சிறு கலவரத்தை உருவாக்க நினைத்தார்கள். வாகாக அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கே அருகில் இருந்த காய்கறி வண்டியிலிருந்து தக்காளிகளை எடுத்து கூட்டத்தின் மீது எறிய ஆரம்பித்தார்கள். பார்த்துக் கொண்டிருந்த சில வேடிக்கை மனிதர்களும் தங்கள் பங்கிற்கு தக்காளிகளை விசி எறிய ஆரம்பித்தனர், எங்கெங்கு நோக்கினும் தக்காளிகள் பறந்தன. கலவரக்காரர்கள் தக்காளிக்கான பணத்தைக் கொடுக்கத்தான் வேண்டியதிருந்தது. ஆனால் அப்பொழுது ஆரம்பித்த களேபரமான திருவிழா, திரும்பத் திரும்ப நடக்க ஆரம்பித்தது. அது புதியதொரு பாரம்பரியம் பிறக்க வழிவகுத்தது. இந்தக் கொண்டாட்டங்கள் சட்டங்களை உடைத்து வன்முறையை பரப்புமே என்ற அச்சத்தில், 1950 களில் தொடர்ச்சியாகப் பலவித தடைகளை விதித்தும், சட்டங்களை மாற்றியும், அவ்வப்போது விலக்கிய தடைகளை மீண்டும் அமுலாக்கியும் அதிகாரிகள் கட்டுக்கோப்பினை நிறுவ முயன்றனர். 1951 ல் இம்மாதிரிக் கலவரங்களில் ஈடுபட்டவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டியதிருந்தது. முக்கியமாக 1957 ஆம் ஆண்டு தக்காளியையே தடை செய்யும் அளவிற்கு இந்த கட்டுப்பாடுகள் வளர்ந்துவிட்டன. தக்காளித் திருவிழா ஆதரவாளர்களோ, கேலியாக தக்காளியைச் சவப்பெட்டியில் வைத்து, தக்காளிக்கு இறுதி ஊர்வலம் நடத்தி இறுதிச் சடங்குகள் நடத்தினர், 1957 க்குப் பிறகு அரசு இதை ஒரு பாரம்பரியமாக அங்கீகரித்து இதற்கென விதிமுறைகளை வகுத்து, இந்த வினோதமான திருவிழாவை ஒப்புக் கொண்டது. தக்காளி வீச்சு இந்த விழாவின் பிரதான இடத்தைப் பிடித்தாலும், இது ஒரு வார காலமாகக் கொண்டாடப்படும் விழா. இதன் உச்சகட்டமாகவே தக்காளித் திருவிழா நடக்கிறது. இது புனால் என்னும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சிறு நகரத்தில் கன்னி மேரி மற்றும் புனித லூயிஸ் பெர்ட்ராண்ட் ஆகிய புனிதர்களின் நினைவாக நடக்கும் விழா ஆகும். இதில் ஊர்வலங்கள், இசை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள் போன்ற பல மனமகிழ் கொண்டாட்டங்கள் இஸ்பானிய முறைப்படிக் நடக்கின்றன. உச்சகட்டமாக நடக்கும் அதிரடிக்கு நம் உடலைத் தயார் செய்யும் விதத்தில் அரிசி, மீன், குங்குமப் பூ மற்றும் ஆலிவ் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட வெலன்சியாவின் சிறப்பு உணவை அனைவருக்கும் அளிக்கின்றனர். கட்டுப்பாடற்ற இந்தத் திருவிழா இன்று சில வரைமுறைகள் கொண்டுள்ளது. உண்ண ஏதுவற்ற தக்காளி வகைகளை விழா நடத்துனர்கள் இந்த விழாவிற்கென்றே பயிரிடுகிறார்கள். காலை பத்துமணி சுமாருக்கு கொண்டாட்டம் ஆரம்பமாகிறது. போட்டியாளர்கள், வழுவழுவென எண்ணெய் பூசப்பட்ட வழுக்குமரத்தில் உச்சியில் இருக்கும் பன்றிக்கால் இறைச்சியை எடுக்க முயற்சி செய்ய, வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அவர்களின் மீது தண்ணீரை இறைத்தப்படி ஆடிப் பாடுகிறார்கள். உச்சிப்பொழுதை அறிவிக்க சர்ச்சின் மணி அடிக்கும் பொழுது, தக்காளிகளைச் சுமந்தபடி வாகனங்க்கள் ஊருக்குள் வருகின்றன. “தக்காளி” “தக்காளி” என்ற கூக்குரல் வலுத்துக் கொண்டே போகிறது. உடனே தண்ணீர் பீரங்கிகளால் பீய்ச்சி அடிக்கப்பட உச்சகட்டம் ஆரம்பமாகிறது. தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்ட உடன் ஒவ்வொருவரும் கையில் கிடைக்கும் தக்காளிகளைக் கொண்டு மற்றவரின் மீது சரமாரியாகத் தாக்கத் தொடங்கி விடுகிறார்கள். இதுதான் சிறந்த தாக்குதல் என்று இல்லை. நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதல், பக்கத்தில் சென்று குபீர்த் தாக்குதல், சற்றே தொலைவிலிருந்து குறி வைத்து தாக்குதல் என அனைத்து வகைத் தாக்குதலும் நடக்கும்,. ஏறத்தாழ ஒருமணி நேரப் போருக்குப் பின் தெருவெங்கும் செந்நிறமாக மாறிப்போன தக்காளி வீரர்கள், சட்னியை ஒத்து நசுங்கிப்போன தக்காளிச்சாறுக் கடலில் நீந்திக் கொண்டிருப்பர். தண்ணீர் பீரங்கி இரண்டாம்முறை பீய்ச்சி அடிப்பது விழாவின் முடிவாகக் கருதப்படுகிறது. | Entry #19405 — Discuss 0 — Variant: Not specified
|
லா டொமடினா புரட்சியைத் துவங்கிய அந்த முதல் துரதிஷ்ட்டவசமான தக்காளியை எறிந்தவர் யார்? உண்மை என்னவென்றால், அதை யாரும் அறியவில்லை. ஒரு வேளை அது ஃப்ரங்க்கோ எதிர்ப்புக் கலகமாகவோ அல்லது அத்துமீறிப்போன ஒரு களியாட்டமாகவோ இருக்கலாம். இக்கதையின் மிகவும் புகழ்பெற்ற பதிப்பின்படி, 1945இல், லாச் ஜைஜன்டெச் (மாபெரும் காகிதக்கூழ் பொம்மைகளின் அணிவகுப்பு) திருவிழாவில் உள்ளூர்வாசிகள் பிறர் கவனத்தை ஈர்ப்பதர்க்குக் கூச்சலுடனான சண்டையை அரங்கேற்றப் பார்த்தனர். காய்கறி வண்டி ஒன்று அவர்கள் அருகிலிருக்க நேர்ந்ததும் பழுத்தத் தக்காளிகளைப் பலமாக வீசி எறியத் தொடங்கினர். இக்காட்சி, பறக்கும் பழங்களின் மாபெரும் கைக்கலப்பாக உயரும்வரை அப்பாவிப் பார்வையாளர்களும் பங்கேற்றனர். தூண்டுதலாளர்கள், தக்காளி விற்பனையாளர்களுக்குப் பணத்தைத் திரும்பச் செலுத்தவேண்டியிருப்பினும், நிறைய தக்காளிச் சண்டைகள் மறுபடி நிகழ்வதையும் ஒரு புதிய பாரம்பரியத்தின் பிறப்பையும் அது தடுக்கவில்லை. இது கட்டுக்கடங்காமல் உயர்ந்துவிடுமோ என்ற அச்சத்தால், 1950களில் அதிகாரிகளால் தொடர் தடை உத்தரவுகள் இயற்றப்பட்டன; தளர்த்தப்பட்டன; பின் மீண்டும் அமுலாக்கப்பட்டன. 1951இல், சட்டத்தை மீறிய உள்ளூர்வாசிகள் சிறைப்படுத்தப்பட்டு, அவர்களின் விடுதலைக்காக பொதுமக்களின் கூக்குரலுக்குப் பின்னரே விடுவிக்கப்பட்டனர். மிகவும் புகழ்பெற்ற தக்காளித் தடை எதிர்ப்பு நிகழ்ச்சி 1957இல் ஆதரவாளர்கள் நிகழ்த்திய சவப்பெட்டி ஊர்வலத்துடன் கூடிய முழுமையான பரிகாச ஈமச்சடங்கு ஆகும். 1957க்கு பின்னர் , உள்ளூர் அரசாங்கம் ஊரோடு ஒத்துப்போக முடிவு செய்து, ஒரு சில விதிகளை விதித்து இந்தப் புதுமையான பாரம்பரியத்தை ஆதரித்தது. தக்காளிகள், நிகழ்வின் மையமாய் இருந்தாலும், ஒரு வாரகால கொண்டாட்டங்கள் இறுதி மோதலுக்கு இட்டுச்செல்லும்.அது மகிழ்ச்சிகரமான ஸ்பானிய முறைப்படி, வீதி ஊர்வலம், இசை மற்றும் வானவேடிக்கையுடன் கூடிய புனாலின் ரட்சக அருட்தொண்டர், கன்னி மேரி மற்றும் புனித லூயி பெர்னார்டுக்கான கொண்டாட்டங்கள். நிகழவிருக்கும் சண்டைக்கான வலிமையை அதிகப்படுத்த, அதற்கு முதல் நாள், மாபெரும் பாயெல்லா எனும் அரிசி, கடல் உணவு, குங்குமப்பூ மற்றும் ஆலிவ் எண்ணையாலான வாலென்சிய உணவு வகை படைக்கப்படும். இன்று, இந்தக் கட்டுப்பாடற்ற திருவிழா ஓரளவு ஒழுங்குடன் நடைபறுகிறது. இந்த வருடாந்திர நிகழ்விற்காக மட்டும், சுவைக்க இயலாத சிறந்த வகை தக்காளிகளை விளைவிக்கும் அளவிற்குச் சென்றுள்ளனர் அமைப்பாளர்கள்.10 மணியளவில், பங்கேற்பாளர்கள் , வழுக்குக் கம்பத்தின் உச்சியிலிருக்கும் பன்றி இறைச்சியைக் கைப்பற்றப் போட்டியிடும்போது கொண்டாட்டங்கள் உயரத்தொடங்கும். பார்வையாளர்கள், வீதிகளில் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் ஏறுபவர்கள் மீது நீரைப் பீய்ச்சி அடிப்பர். நண்பகலில் தேவாலய மணி ஒலிக்கும்போது தக்காளிகள் நிரம்பிய சரக்குவண்டிகள் ஊருக்குள் உருண்டு வரும் வேளையில்" டொ - மா - டீ, டொ - மா - டீ!" என்ற மந்திரம் உச்சத்தை அடையும். பின்னர், நீர் பீரங்கி முழக்கத்தோடு முக்கிய நிகழ்வு தொடங்கும். அதுவே, சக பங்கேற்பாளருக்கு எதிராக முழுமையான தாக்குதலில் தக்காளிகளை நசுக்கி எறிவதற்கான பச்சை விளக்கு. தொலைதூர தக்காளி எறிவோர், மிக அருகில் குறி வைத்துத் தாக்குவோர், இடை தூர வீச்சு. உங்கள் செயல்முறை எதுவாக இருப்பினும், சண்டை நிறைவுரும்போது பார்க்க (உணர) வித்தியாசமாக இருப்பீர்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, தக்காளியில் நனைந்த வீச்சாளர்கள், தக்காளி போல சிறிதளவே ஒத்திருக்கும் வழுவழுப்பான வீதி சல்சாவின் கடலில் விளையாடிக்கொண்டிருப்பர். இரண்டாம் பீரங்கி முழக்கம், சண்டை நிறைவடைந்ததைக் குறிக்கும். | Entry #20053 — Discuss 0 — Variant: Not specified
|
யார் இந்த தக்காளியைக் கொண்டு “லா தொமாத்தினா” என்ற ஒரு வித்தியாசயமான கேளிக்கை விளையாட்டை தோற்றுவித்தது? அவ்வுண்மையை யாருமே அறிவர். ஊர் மக்களுக்கு தொல்லை கொடுத்த போராளி பிரான்ஸ்கோவை தாக்கும் பாவனைக்காக இவ்விளையாட்டை ஆரம்பத்திருக்கலாம் அல்லது அதனையும் மிஞ்சியதொன்றாயும் இருக்கலாம். அலசி ஆராய்ந்து கண்டெடுக்கப்பட்ட தகவலில் 1945-ஆம் ஆண்டு நடைபெற்ற “லோஸ் ஜிகாந்தெஸ்”, (பல்வடிவ பேர் உருவமொம்மைக் கூத்து) நிகழ்வில் ஒரு கூட்டத்தினர் மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்க காய்கறிப் பொருட்களை கையெறிப் பொருட்களாக பயன்படுத்தி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தற்செயலாக அவ்வழியே வந்த தக்காளிச் சுமைவண்டி அவர்களின் கண்ணில் படவே கொண்டாட்டம் மேலும் கொடிகட்டிப் பறந்தது. அதற்கான விலையினைக் கேட்டு விளையாடியவர்கள் நல்லபடியே கொடுத்து விட்டனர்.பிறகென்ன அக்கூட்டத்தினர் அவ்விளையாட்டை மிகவும் விரும்பி வருடாந்திர விழாவாக கோலாகலமாக நடத்தத் துவங்கினர். அவ்வண்ணமே இன்று அவ்விளையாட்டு அவ்வூர் கலாச்சார விழாவாக மாறிவிட்டது. தொடர்ச்சியாக அவ்விளையாட்டு வரைமுறையற்று அஞ்சக்கூடிய அளவில் காரசாரமாக நடப்பதை அதிகாரிகள் கவனித்தனர். விளைவு 1950 மற்றும் 1951-ஆம் ஆண்டுகளில் அவ்விளையாட்டைத் தடை செய்தனர். அதனையும் மீறி விளையாடிய சிலரை அதிகாரிகள் சிறை பிடித்தனர் .இந்த சட்ட அத்துமீறலை மக்களே எதிர்த்து சிறையிலுள்லோரை விடுதலை செய்ய வைத்தனர். பிறகு மீண்டும் 1957-ல் தக்காளி விழா வரலாற்றில் ஒரு தடை ஏற்படுத்தப்பட்டது. இதற்குக் காரண்ம் நடந்த முடிந்த வருடத்தில் எதிர்கட்சியினர் ஒரு சவப்பெட்டியினைக் கொணர்ந்து சடங்கு, சம்பிரதாயங்களை நடத்தி விழாவையே அசிங்கப்படுத்தியதாகும். அதன் பிறகு ஆட்சியாளர்கள் பெரும்பான்மை மக்களின் வேண்டுகோளுக்கொப்ப தக்காளி விளையாட்டினை ஒரு கோலாகால விழாவாக பிரகடனப்படுத்தி அதற்கான சட்டத் திட்டத்தினையும், வரைமுறைகளையும் வடிவமைத்தனர். இவ்விழா தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு நடைபெறும். விழாவின்போது ஒரு எல்லைக்குட்பட்ட ஆட்டப் பகுதியின் மையத்தின் நடுவே தக்காளிகள் குவிக்கப்பெறும். நம்மூர் விழாவில் வீரன் மற்றும் அம்மன் நடப்பதுபோல் 'பூனொல்' மாநில விழாவில் அவ்வூர் வீரர்களும், கன்னி மேரியும் மற்றும் சென்ட் லூயிஸ் பெர்ட்ரன்ட்டும் ஸ்பானிய இசைமேளத்துடன், வானவெடிப்புக்களுடன், கலாச்சா ஆடை அலங்காரத்துடன் பெருங்கூட்டமாக கோஷமிட்டு பவனி வருவர். “எபிக்பெல்லா” எனும் பாரம்பரிய ஊட்ட உணவு விளையாட்டு வீரர்களுக்கென பிரமாண்டமாய் தயார் செய்யப்பட்டிருக்கும். அது வெலன்சியர்களின் வேளான்மையில் உருவான சாதத்துடன், கடல் உணவுவகைகளின் கலவை, கஸ்தூரி எண்ணெய், மஞ்சள் போன்றவைகளைக் கொண்டிருக்கும். இன்று இந்த கேளிக்கைத் தனமான தக்காளி விளையாட்டு வருடாந்திர பெருவிழாவாக மாறி அதற்கான முன்னேற்பாடுகள் மிகவும் சிரத்தையுடன் செய்யப்படுகிறது. ஒரு வார வருடாந்திர விழாவிற்கெனவே பலதரபட்ட தரமிக்க தக்காளிகளை வேளான்மை செய்கின்றனர். சரியாக காலை 10 மணிக்கு விழாவைத் தொடக்குவர். வீரர்கள் கையில் உள்ள பன்றி வத்தலை வழுக்குமர கம்பத்தில் ஏறி சொருக முயற்சிப்பர். அதே வேளையில் பங்கேற்பாளர்கள் மீதும் அங்கு உள்ளவர்கள் மீதும் நெகிழி(பிளாஸ்டிக்) நீர் குழாயினைக் கொண்டு த்ண்ணீர் மழைபோல் பாய்ச்சப்படும். அச்செயற்கை மழையில் அனைவரும் ஆடிப்பாடி விளையாடுவர். தொடர்ந்து நண்பகலில் தேவாலய மணியின் ஓசை ஊடுருவி வரும். கூடவே தக்காளிகள் ஏற்றிவரும் சுமை உந்துகள் (லோரிகள்) விளையாட்டு மையத்தில் நுழையும். ஓட்டுனர்ககளுடன் சேர்ந்து மக்களும் ‘துமாத்தே-துமாத்தே’ என்று சிறுக சிறுக ஆரவாரமிடுவர். இக்கூவல் கோதாவின் நடுவில் தக்காளிகளைக் கொட்டும்போது பேரொலியாக கேட்கும். . அதன் பிறகு நீர் பீரங்கிகள் நீர் பாய்ச்சும்போது உச்சகட்ட நேரம் ஆரம்பிக்கும். இதுவே தக்காளிகளை நசுக்கி விளயாட்டைத் தொடங்கக் குறிக்கும் பச்சை விளக்காகும். விளையாட்டில் வெகுதூர தக்காளி வீச்செறிவாளர்கள், குறிபார்த்து எறியும் வீச்சாளர்கள், கண்மூடித்தனமாக எறிபவர்கள் மற்றும் நடுவில் நின்று கொண்டு வியூகம் செய்து எறிபவர்களின் காட்சிகள் காணக் களிப்பனவாகவும், மாறுபட்டவையாகவும் இருக்கும். ஏறத்தாள ஒரு மணி நேரத்திற்கு தக்காளி குண்டு வீச்சுச் சாறில் நனைந்து போனவர்கள், தக்காளிகள் தீர்ந்து போனதும் கடல் போல் தரையில் படர்ந்து கிடக்கும் தக்காளிச் சாற்றில் பிரண்டு குதித்து விளையாடுவர். அந்த நேரத்தில் இரண்டாம் முறையாக நீர் பீரங்கியிலிருந்து தண்ணீர் பாய்ச்சி வரும்.இதுவே அன்றைய தின விளையாட்டுக்கு பிரிவிடையாகும். | Entry #19889 — Discuss 0 — Variant: Not specified MURUGAIYAH PILLAY LETCHUMANAN (X) Malaysia
|
யார் லா Tomatina புரட்சி தொடங்கியது என்று முதல் துரதிர்ஷ்டமான தக்காளி நடித்தார்? உண்மையில் யாருக்கும் தெரியாது ஆகிறது. ஒருவேளை அது ஒரு எதிர்ப்பு பிரான்ஸ் கிளர்ச்சி, அல்லது கையை வெளியே கிடைத்துவிட்டது என்று ஒரு திருவிழாவிற்கு இருந்தது. கதை மிகவும் பிரபலமான பதிப்பு படி, லாஸ் ராட்சதர்கள் (ஒரு பெரிய காகித mache கைப்பாவை அணிவகுப்பு) 1945 திருவிழாவின் போது, உள்ளூர் சில கவனத்தை பெற ஒரு சகாக்கள் நிலை தேடும். அவர்கள் அருகில் உள்ள ஒரு காய்கறி வண்டி மீது நடந்தது மற்றும் பழுத்த தக்காளி வீசினர் தொடங்கியது. காட்சி பறக்கும் பழம் பெரும் கைகலப்பு விரிவாக்கம் வரை அப்பாவி பார்வையாளர்கள் தொடர்பு கிடைத்தது. தூண்டுதலாக தக்காளி விற்பனையாளர்கள் திருப்பி, ஆனால் அந்த தக்காளி சண்டை மற்றும் ஒரு புதிய மரபை பிறந்த மீண்டும் நிறுத்த சொல்லவில்லை. ஒரு கட்டுக்கடங்காத விரிவாக்கம் என்ற அச்சத்தில், அதிகாரிகள், தளர்வான இயற்றப்பட்டது, பின்னர் 1950 ல் தடை ஒரு தொடர் மீண்டும். 1951 ஆம் ஆண்டில், சட்டம் மீறி யார் உள்ளூர் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று பொது மக்களின் கண்டனங்களை வரை சிறையில் அடைக்கப்பட்டனர். ஆதரவாளர்கள் ஒரு சவப்பெட்டி மற்றும் ஊர்வலமாக முழுமையான ஒரு போலி தக்காளி இறுதி நடைபெற்ற போது தக்காளி தடை மிகவும் பிரபலமான நினைக்கிறீர் 1957 ல் நடந்தது. 1957 பிறகு, உள்ளூர் அரசு, குத்துக்கள் கொண்டு உருட்ட முடிவு இடத்தில் ஒரு சில விதிகள் அமைக்க, மற்றும் wacky பாரம்பரியம் ஏற்றுக்கொண்டனர். தக்காளி சென்டர் அரங்கில் எடுத்து என்றாலும், விழாவின் ஒரு வாரம் இறுதி வரை வழிவகுக்கிறது. இது சந்தோஷமான ஸ்பானிஷ் ஃபேஷன் தெருவில் அணிவகுப்பு, இசை, மற்றும் வானவேடிக்கை Buñol தான் புனித துறவிகளின், கன்னி மேரி மற்றும் செயின்ட் லூயிஸ் பெர்ட்ரண்ட், ஒரு கொண்டாட்டம் தான். வரவிருக்கும் சகாக்கள் உங்கள் வலிமை கட்டமைக்க, ஒரு காவிய paella ஒரு உருவக வாலேன்சியா அரிசி டிஷ், மீன் உணவு, குங்குமப்பூ, மற்றும் ஆலிவ் எண்ணெய் காட்சிக்கு, போர் முன்பு பணியாற்றினார். இன்று, இந்த தடையற்ற திருவிழா பொருட்டு சில நடவடிக்கை உள்ளது. அமைப்பாளர்கள் இதுவரை வெறும் ஆண்டு நிகழ்வு எஸ் தக்காளி ஒரு சிறப்பு பல்வேறு பயிரிட போயிருக்கிறார்கள். பங்கேற்பாளர்கள் இனம் ஒரு வழவழப்பான கம்பு மீது நிலையான ஒரு ஹாம் அடைய போது விழாக்களில் 10 மணியளவில் உதைக்க. பாடல் மற்றும் தெருக்களில் நடனமாடி போது பார்வையாளர்கள் தண்ணீர் scramblers குழாய். சர்ச் பெல் நண்பகல் தாக்குகிறது போது, தக்காளி நிரம்பிய டிரக்குகள் "என்று ma-te, க்கு MA-TE!" என்ற போது மந்திரங்களை, நகரம் ரோல் ஒரு படிப்படியான அடைய. பின்னர், ஒரு தண்ணீர் பீரங்கி, துப்பாக்கி சூடு மூலம், முக்கிய நிகழ்வு தொடங்குகிறது. என்று சக பங்கேற்பாளர்கள் எதிரான அனைத்து அவுட் தாக்குதல் தக்காளி நசுக்கிய மற்றும் தொடங்குவதில் பச்சை விளக்கு தான். நீண்ட தூரம் தக்காளி lobbers, புள்ளி வெற்று கொலை, மற்றும் நடுத்தர அளவிலான கொக்கி காட்சிகளின். என்ன உங்கள் தொழில் நுட்பம், அது முடிந்துவிட்டது நேரத்தில், மிகவும் வித்தியாசமாக இருக்கும் (உணர). கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து, தக்காளி நனைத்த குண்டு காணலாம் ஒரு தக்காளி போன்ற சிறிய இடது ஈரமும் தெரு சல்சா ஒரு கடலில் விளையாட உள்ளன. இரண்டாவது பீரங்கி ஷாட் போரின் இறுதியில் அடையாளம் காட்டுகிறது. | Entry #17735 — Discuss 0 — Variant: Not specified
|